விரைவு எதிர்வினை குறி(QR) முறையினை அறிமுகப்படுத்தல்

பருத்தித்துறை பிரதேசசபையில் வருமானத்தினை பெற்றுத்தரும் விடயங்களின் வேலையை துரிதப்படுத்தும் வகையிலும் ஒவ்வொரு விடயங்களினையும் இலகுபடுத்தி நேரத்தினை குறைத்துக் கொள்ளும் வகையிலும் பொது மக்கள் தமது பணத்தினை இலகுவாக பரிமாற்றம் செய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட்ட இவ் விரைவு எதிர்வினை குறியானது  2024.03.04  இலங்கை வங்கி உத்தியோகத்தர்களால் சபையின் செயலாளர் திரு. அ. வினோராஜ் அவர்களிடம் விரைவு எதிர்வினை குறியானது(QR) வழங்கி வைக்கப்பட்டதுடன் அதனை பயன்படுத்தும் முறையினையும் வங்கி உத்தியோகத்தர்கள் தெளிவுபடுத்தினார்கள். இதன் ஊடாக சபைக்குச் சொந்தமான எல்லா விதமான கொடுப்பனவுகளையும் அதனூடாகவே பொதுமக்கள் மேற்கொள்ள முடியும். மேலும் விசேட பணம் செலுத்தும் நடைமுறையை செயல்படுத்துவதற்காக இக்குறியானது ஒவ்வொரு உப அலுவலகத்திற்கும் மற்றும் தலைமையலுவலத்திற்குமாக நான்கு விரைவு எதிர்வினை குறிகளினை இலங்கை வங்கி உத்தியோகத்தர்கள் சபையின் செயலாளரிடம் வழங்கி வைக்கும் நிகழ்வு தலைமையலுவலகத்தில் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *