கழிவு சேகரிக்கும் மையம்

பருத்தித்துறை பிரதேசசபைக்குட்பட்ட பகுதியில் வாழும் மக்களை கருத்தில் கொண்டு அவர்கள் சிறந்த முறையில் திண்மக்கழிவினை அகற்றுவதற்கும் அதனை பிரதேசசபையானது சிறப்பாக முகாமை செய்வதற்கும் ஏற்ற வகையில் சபையின் செயலாளர் திரு. அ. வினோராஜ் அவர்களால் மருதங்கேணி வீதியிலுள்ள சபைக்கு சொந்தமான இடத்தில் கழிவு சேகரிக்கும் மையம் ஒன்றினை திறந்து வைத்துள்ளார்.

இவ் மையமானது வாரத்தின் 6 நாட்கள்(திங்கள் – சனி) வரையில் காலை மு.ப10.00 தொடக்கம் பி.ப 6.00 மணி வரையில் அதன் சேவைகள் நடைபெறும் எனவும் செயலாளர் திரு. அ. வினோராஜ் அவர்கள் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *