கற்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் போசணையை அதிகரிப்பதன் ஊடாக எதிர்கால சந்ததியினரினை சிறந்த மற்றும் ஆரோக்கியமான குழந்தைகளாக உருவாக்குவதுடன் வளமான சமுதாயமாக மாற்றுவதன் நோக்கில் இச்செயற்றிட்டமானது மேற்கொள்ளப்பட்டதுடன் வடமாரட்சி வடக்கு 51 பயனாளிகள், வடமராட்சி கிழக்கு 18 பயனாளிக்கும் உதவி வழங்கப்பட்டது. இந்நிகழ்வு பருத்தித்துறை பிரதேச சபையின் தலைமையலுவலகத்தில் செயலாளர் திரு.அ.வினோராஜ் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது.