2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியில் 07 பெண்தலைமையை அடிப்படையாகக் கொண்ட பயனாளி குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி வழங்குவதன் மூலமாக அவர்களின் வாழ்வாதாரத்தினையும் பொருளாதாரத்தினையும் உயர்வடையச் செய்வதன் அடிப்படையில் சமையல் பாத்திரம் மற்றும் உபகரணங்கள் வழங்கும் இச்செயற்றிட்டமானது பருத்தித்துறை பிரதேச சபையின் தலைமையலுவலகத்தில் சபை செயலாளர் திரு.அருணகிரி வினோராஜ் அவர்களின் தலைமையில் இன்று பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.