செயலாற்றுகை மதிப்பீடு 2.0 கீழ் தேசிய மட்டத்தில் ஆரம்ப கட்டமாக 21 மாநகரகபை, 41 நகரசபை மற்றும் 276 பிரதேச சபை ஆகிய உள்ளுராட்சி மன்றங்களின் செயல் திறன் முகாமைத்துவம், சேவைவழங்கல், ஆளுகை நீடித்து நிற்பதற்கான இலக்குகளை அடைவதற்கான பங்களிப்பு ஆகிய பிரதான 4 பகுதிகளின் கீழ் 200 குறிகாட்டிகளின் இணக்கப்பாடு, வினைத்திறன், விளைதிறன் மற்றும் புத்துருவாக்கங்கள் மதிப்பீடு செய்யப்பட்டு அவற்றில் புள்ளிகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட 19 மாநகரசபை, 22 நகரசபை மற்றும் 27 பிரதேச சபைகளுக்கு தேசிய மட்டத்திலான மதிப்பீடு இடம்பெற்று தரவரிசைப்படுத்தப்பட்ட புள்ளிகளின் அடிப்படையில் பிரதேச சபைகளுக்கிடையில் நான்காம் இடத்தினை பெற்றதுடன் அனைத்து குறிகாட்டிகளிலும் இணைக்கப்பாட்டிற்கான மதிப்பீட்டில் தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தை பெற்றமைக்கான சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது.