வட மாகாணத்தின் கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களின் அறிவுத்தலுக்கமைய கடற்கரையோரத்தினை சுத்தப்படுத்தி அழகுபடுத்தும் நிகழ்வானது பருத்தித்துறை பிரதேசசபையின் எல்லைக்குட்பட்ட நீண்ட கரையோரத்தினை கொண்டுள்ள கற்கோவளம்(J/406) பகுதியில் இன்று 2024.04.03 காலை 7.00 – 9.00 மணிவரையில் கடற்கரைப்பகுதியில் பருத்தித்துறை பிரதேச சபையின் செயலாளர் திரு. அருணகிரி வினோராஜ் அவர்களின் தலைமையில் இப்பகுதியின் வட்டார அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேசசபையின் ஏனைய வட்டார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம அலுவலர், சமுர்த்தி உத்தியோகத்தர், கற்கோவளம் சனசமூக நிலையம், மாதர் கிராம அபிவிருத்தி சங்கம், பருத்தித்துறை பிரதேசசபையின் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் இவ்நிகழ்வானது சிறப்பாக நடைபெற்றது. கலந்து தொண்டவர்களுக்கான குளிர்பாணமும் பருத்தித்துறை பிரதேசசபையால் வழங்கப்பட்டது.
ஒத்துழைப்பு வழங்கி இச்செயற்றிட்டத்தை சிறப்பாக கொண்டு செல்வதற்கு உதவிய அனைவருக்கும் பருத்தித்துறை பிரதேசசபை சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.